நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

Thursday, August 25, 2011

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


உலகில் உள்ள மதங்கள் சில வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் மக்களுக்குப் போதிக்கின்றன. பெரும்பாலும் மனிதனின் அன்றாட நிகழ்வோடு தொடர்புள்ள வாழ்வியல் பிரச்சினைகளை அந்த மதங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம் மட்டும் தான் வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஒளி விளக்காக திகழ்கின்றது. விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கும் இந்த அறிவியல் உலகில் எழும் நவீன கால சவால்களை இஸ்லாம் தவிர வேறு மதங்களால் சமாலிக்க முடியாது .இதனால் தான் தேனடையை மொச்சும் வண்டுக்களைப் போல் இஸ்லாத்தை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் மனித வாழ்வில் சிந்தி விழும் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் அற்புத மார்க்கம். அந்த வகையில் இஸ்லாம் சமூக கட்டமைப்பின் அடித்தளமாக திகழும் குடும்பவியல் குறித்தும் துல்லியமாக எடுத்துறைக்கின்றது.

Friday, August 19, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (04)



அரபு மூலம்:
அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி)



அல்குர்ஆன் பற்றி ராபிழாக்களின் நம்பிக்கைக் கோட்பாடு

தற்காலத்தில் ஷீஆக்கள் என்று சொல்லப்படக்கூடிய ராபிழாக்கள் எம்மிடத்தில் இருக்கும் அல்குர்ஆன்,முஹம்மது நபியவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கப்பட்ட அல்குர்ஆன் அல்ல. அது மாற்றப்பட்ட, கூட்டிக் குறைக்கப்பட்ட குர்ஆனாகும் என சொல்கிறார்கள். அதிகமான ஷீஆ ஹதீஸ் கலை அறிஞர்கள் அல்குர்ஆன் திரிபு படுத்தப்பட்டுள்ளது என நம்புகிறார்கள்.இது பற்றி ஷீஆ அறிஞர் அன்னூரி அத் திப்ரிசீ என்பவர் தனது فصل الخطاب في تحرف كتاب رب الأرباب என்ற நுலில் குறிப்பிட்டுள்ளார்.


முஹம்மது பின் யஃகூப் அல்குலைனீ என்பவர் தனது 'உஸூலுல் காபி' என்ற நூலில் 'நிச்சயமாக ஷீஆ இமாம்களாலன்றி அல்குர்ஆன் முழுமையாக ஒன்று சேர்க்கப்படவில்லை'  என்ற தலைப்பில் பின் வரும் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

'மனிதர்களில் யாராவது அல்லாஹ் இறக்கியது போன்று அல்குர்ஆன் முழுவதும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது என்று சொன்னால், அவர் பொய்யர் எனப்படுவார். அல்லாஹ் இறக்கியது போன்று, அலி (ரழி)யும் அவருக்குப் பின் வந்த இமாம்களையும் தவிர வேறு யாரும் அதனை மனனம் செய்யவுமில்லை, ஒன்று சேர்க்கவுமில்லை என அபூ ஜஃபர் சொன்னதை தான் கேட்டதாக ஜாபிர் என்பவர் கூறுகிறார்.

Sunday, August 7, 2011


அந்நியருக்கு மத்தியிலும்அழைப்புப் பணியை விரிவுபடுத்துவோம்



மவ்லவி ஹபீல் (ஸலபி)

இன்று, பல்வேறு கொள்கை சார்ந்த இயக்கங்கள் உள்ளன. அவையனைத்தும் முஸ்லிம்களுக்கு மத்தியில் தான் அதிகளவு பிரசாரம் செய்துவருகின்றன. நம் நாட்டில் இஸ்லாத்தின் வாடையை நுகராது, ஏகத்துவக் கொள்கையின் இன்பத்தை உணராது, நரகத்தின் விளிம்பில் நிற்கும் முஸ்லிமல்லாத மக்களைப் பற்றி பெரிதாக அவை அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதனால், அவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தவறாக விளங்கி வைத்துள்ளனர். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் மோசமான சில நடவடிக்கைகளினால் அவர்களிற் சிலர் இஸ்லாத்தையே வெறுக்கின்றனர். இதனால், நமக்கும் அவர்களுக்குமிடையே பகைமை உணர்வு படர ஆரம்பித்துள்ளது. இந்தக் கசப்புணர்வைக் களைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டியுள்ளது.

இன வன்முறைகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்கும், ஆன்மீக தகிடுதத்தங்களுக்கும், மதவாதிகளின் சுரண்டல்களுக்கும் உட்பட்டு, ஏமாற்றமடைந்துள்ள இவர்களின் மன அழுத்தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகத் திகழும் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை நாம் வழங்க முனைய வேண்டும்.




 ஷீஆக்களின்
சீர்கெட்ட கொள்கைகள் (03)



அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி)


அல்பதாவு பற்றி ராபிழாக்களின் நம்பிக்கை கோட்டாடு 

'பதாவு' என்றால் தோன்றுதல் என்பதாகும். அத்தோடு வளர்ச்சி புதிய கருத்து என்ற கருத்துக்களையும் வழங்குகிறது. இக்கருத்துக்களைப் பார்க்கும் போது ஒன்றைப் பற்றி முன்னர் அறியாமலிருந்து பின்னர் தெரிய வருவது என்பதையே இது குறிக்கிறது.

இவ்விரு பன்புகளும் அல்லாஹ்வுக்கு இருக்க முடியாதவைகளாகும்.அல்லாஹ் இவைகளை விட்டும் உயர்ந்தவன் பெரியவன்.
அல்லாஹ்வுடன் அறியாமையை எவ்வாறு தொடர்புபடுத்த முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.?

 قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ   يُبْعَثُونَ سورة النمل : 65  
அல்லாஹ் தன்னைப் பற்றி வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'என்று கூறுவீராக எனக் குறிப்பிடுகின்றான் (சூரதுல் நம்ல் 65)

இதற்கு மாற்றமாக ஷீஆ இமாம்கள் அனைத்தையும் அறிந்தவர்கள். அவர்களுக்கு எதுவும் மறையாது என்று ராபிழாக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். இதுதான் நபியவர்கள் கொண்டுவந்த நம்பிக்கைக் கோட்பாடா?

Tuesday, August 2, 2011


தவ்ஹீத்வாதிகள் கொலை செய்தார்களா? திசை திருப்பப்படும் கெக்கிராவைச் சம்பவம்.


“சந்திரனைப் பார்த்து நாய் குரைத்த” கதையாகிய தப்லீக் ஜமாத்தினர்.



இலங்கை முஸ்லீம்கள் வரலாற்றில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஏகத்துவப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரக் கலத்தில் எத்தனையோ பிரச்சினைகள், சண்டைகள், சிக்கள்கள் எல்லாம் ஏற்பட்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இந்தப் பிரச்சினைகளில் ஒரு இடத்தில் கூட ஏகத்துவவாதிகள் அடித்தார்கள், கொலை செய்தார்கள் என்று யாராலும் நிரூபிக்க முடியாது.

தவ்ஹீத் வாதிகள் அடிவாங்கிய வரலாறு உண்டு, ஊர் நீக்கம் செய்யப்பட்ட வரலாறு உண்டு, ஏன் கொலை செய்யப்பட்ட வரலாறுகள் கூட உள்ளது. ஒரு இடத்தில் கூட அடித்தார்கள் வெட்டினார்கள் என்ற வரலாறு கிடையாது.

ஆனால் கடந்த வியாழக் கிழமை நடந்த ஒரு சம்பவத்தில் தவ்ஹீத் வாதிகளை கொலை காரர்களாக காட்டுவதற்க்கு முனைகிறது ஒரு கும்பல்.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger